அன்பே சிவம்

கார்த்திகேயனின் வலைப்பதிவு

Wednesday, May 27, 2009

முதல் பதிவு - மொக்கை மேட்டர்




ரொம்ப நாளா எல்லாரும் எழுதுறத பார்த்து நாமும் எழதுனா என்னன்னு தோனிச்சி.....
இன்னிக்கி உக்காந்தாச்சி
ஒரு முன்னுரை.. (வேணாம்டா.... சரி வேணாம்... இன்னொரு நாள் வச்சிகலாம்)
இன்னைக்கு இசை சேனல்களில் நட்க்கும் கூத்து பற்றி
ட்ரிங் ட்ரிங்....
ஹலோ யார் பேசுரிங்க...
ஹலோ நான் தான் .. நேத்து கூட பேசினோமே ... கண்டு பிடிங்க ( ஆரம்பிச்சிட்டாங்கடா )
குமாரா...
இல்லை...
விஜய்...
இல்லை... (முடியலடா)
ஞாபகம் இல்லையே .. நீங்களே சொல்லுங்க ...
ரவி பேசுறேன் ...(echo ரவி பேசுறேன்..)
கொஞ்சம் வால்யூம் கொறைங்க.. அப்புறம் சொல்லுங்க ரவி.என்ன பண்ணுரிங்க..
படிச்சிட்டு சும்மா இருக்கேன் ( அதான பார்த்தேன்) இருங்க என் ஃப்ரெண்டு பேசுரான்.
சொல்லுங்க உங்க பேரு என்ன..
பிரபுங்க . நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.. (ஐயோ.. முடியல) நான் உங்களுக்கு பல வருசமா ட்ரை பண்றேன். ( வேற் பொலப்பே
இல்லியா)
சரி உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்க ..
ஏதாவது புது பாட்டு போடுங்க..அப்புறம் இந்த பாட்ட என் ஃப்ரெண்டஸுக்கு டெடிக்கேட் பண்ணிடுங்க ( எவண் பாட்டை எவண்டா டெடிக்கேட்
பண்ணுரது)
கண்டிப்பா . உங்களுக்கு பிடிச்ச பாட்டு வருது பார்த்து என்ஜாய் பண்ணுங்க...
[பாட்டு வருது]
காம்ப்யரர் தன் ஃப்ரெண்டிடம் - கெட்ட பொலப்புடி . இவங்க குடுக்குர பத்துக்கும் அஞ்சிக்கும்...கண்ட பயல்லாம் கடலை போடுறாண்

மனசாட்சி - டேய் இந்த பொலப்பு உனக்கு தேவயாடா , இது ஒரு பதிவா. மொக்கை மேட்டர்.

நான் - மன்னிச்சிடு மொத பதிவு . எதாவது ஆரம்பிகனும்ல..

Labels: ,